மொடக்குறிச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது

மொடக்குறிச்சி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மொடக்குறிச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
Published on

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமி

மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுமி நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதைக்காக அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளார்.

கைது

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரகுமான் (வயது 27) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டு அலறினா. சிறுமியின் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச்சென்று ரகுமானை பிடித்து மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ரகுமானை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com