அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

மாநகராட்சி, உள்ளாட்சி துறைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பண்டிகை கால உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com