

சென்னை,
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் குஜராத் மாநிலத்தின் வழியாக கடத்திவரப்பட்டு, தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்ஷேட் உத்தரவின் பேரில் ஐ.ஜி. சங்கர் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரெங்கராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் தமிழகத்தில் மட்டும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 12 கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரன் (வயது34), அவரது உறவினர் நாகராஜ் (30), தஞ்சை பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா (32), நெல்லையை சேர்ந்த எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.