

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டி திருச்சியில் நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை, பள்ளி முதல்வர் ராதா ராஜேசுவரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.