பதவி பறிபோய் விடுமோ என்ற பதற்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார் கமல்ஹாசன் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோய் விடுமோ என்ற பதற்றத்தில் பேசுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
பதவி பறிபோய் விடுமோ என்ற பதற்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார் கமல்ஹாசன் பேட்டி
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு களியாம்பூண்டி கிராம மூத்த உறுப்பினர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். உதவி திட்ட அதிகாரி ஜோதி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

இந்த கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பார்வையாளராக கலந்துகொண்டார்.

கூட்டம் முடிந்த பின்பு பொதுமக்களிடம் கமல்ஹாசன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் நடந்த இந்த கிராமசபை கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொள்ள வந்த என்னை பெருந்தன்மையுடன் அனுமதித்த கிராம மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 25 ஆண்டுகளாக கிராமசபை என்ற ஆயுதம் நம் கையில் இருந்தாலும் அதை சரிவர இயக்காத நிலையில், கிராம மக்கள் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக வந்தேன்.

கிராமசபை கூட்டங்களில் நடைபெறும் தீர்மானங்களை சுவரொட்டிகளாக அடித்து முக்கிய இடங்களில் கிராமங்களில் ஒட்டினால் மக்கள் அதை பார்த்து இந்த பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொள்வார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 12 ஆயிரத்து 524 கிராமசபை கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com