தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை இல்லை என்று அறிவித்த எச்.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்தும், அனைத்து துறை வேலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com