பா.ஜனதா மீதான காழ்ப்புணர்ச்சியில் நிர்வாகியின் வாகனங்கள் எரிப்பு

பா.ஜனதா மீதான காழ்ப்புணர்ச்சியால் திண்டுக்கல்லில் நிர்வாகியின் வாகனங்கள் எரிக்கப்பட்டதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பா.ஜனதா மீதான காழ்ப்புணர்ச்சியில் நிர்வாகியின் வாகனங்கள் எரிப்பு
Published on

பா.ஜனதா நிர்வாகி வாகனம் எரிப்பு

திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜனதா தலைவர் பால்ராஜ். இவர், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் அலுவலகம் வைத்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு அவருடைய அலுவலகத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். அதில் ஒரு கார், 7 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் என்பவரை கைது செய்தனர்.

அண்ணாமலை பார்வையிட்டார்

இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று, திண்டுக்கல் மாநகர தலைவர் பால்ராஜின் அலுவலகத்துக்கு வந்தார். அவரை கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்களை அண்ணாமலை பார்வையிட்டார். மேலும் பால்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜனதா மீதான காழ்ப்புணர்ச்சியில் பால்ராஜின் வாகனங்களுக்கு விஷமிகளால் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் 3 பேரை விரைவில் கைது செய்வதாக கூறியிருக்கின்றனர். பால்ராஜுக்கு பா.ஜனதா துணையாக இருக்கும். என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com