வேலூர் கயிலாயநாதர் கோவிலில் ஆண்டுக்கு 3 வாரம் மட்டும் மூலவர் மீது விழும் சூரிய ஒளி

கோவிலின் மூலவர் மீது விழுகின்ற சூரிய ஒளியை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வந்து தரிசனம் செய்கின்றனர்.
வேலூர் கயிலாயநாதர் கோவிலில் ஆண்டுக்கு 3 வாரம் மட்டும் மூலவர் மீது விழும் சூரிய ஒளி
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பாக்கம் உள்ள பழமையான கயிலாயநாதர் திருகோவிலின் மூலவர் மீது ஆண்டுக்கு 3 வாரங்கள் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறு மிகவும் நுட்பமான வடிவில் இந்த கோவிலின் கட்டுமான அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த கோவிலின் மூலவர் மீது விழுகின்ற சூரிய ஒளியை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வந்து தரிசனம் செய்கின்றனர். இதையடுத்து கயிலாயநாதர் கோவிலில் தங்கள் குடும்பங்களோடு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com