விளாத்திகுளத்தில்கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயில் மீட்பு

விளாத்திகுளத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயில் பத்திரமாக மீட்கப்பட்டது.
விளாத்திகுளத்தில்கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயில் மீட்பு
Published on

எட்டயபுரம்:

விளாத்திகுளம் - துளசிபட்டி வைப்பாற்று கரையில் உள்ள ஒரு கிணற்றில் 3 வயது ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிரோடு பத்திரமாக மீட்டனர். அந்த மயில் விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்புக்காவலர் ஜெயாபாலனிடம் ஒப்படைக்கப்பட்டது.

-

X

Daily Thanthi
www.dailythanthi.com