புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

தெற்கு கடையத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்பட்டது.
புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
Published on

கடையம்:

கடையம் யூனியன் தெற்கு கடையம் ஊராட்சியில் பெருமாள் கோவில் அருகே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை தலைமை தாங்கி அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் பழனியப்பன், ஊராட்சி உறுப்பினர்கள் பூமாரி, பிரேமலதா, பேச்சியம்மாள், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com