புதிய பகுதி நேர கூட்டுறவு நியாயவிலைக்கடை திறப்பு விழா

திருவண்ணாமலை அவலூர்பேட்டையில் பகுதி நேர ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது
புதிய பகுதி நேர கூட்டுறவு நியாயவிலைக்கடை திறப்பு விழா
Published on

திருவண்ணாமலை அவலூர்பேட்டையில் பகுதி நேர ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை ஒன்றியத்தில் செயல்படும் வேங்கிக்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு அய்யப்பன் நகர் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் புதிய பகுதி நேர கூட்டுறவு நியாய விலைக்கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார்.

விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்து வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் துணைப் பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜசேகரன், கூட்டுறவு சார் பதிவாளர் பிரதாப், திருவண்ணாமலை தாசில்தார் சரளா, வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் கென்னடி, பரத், மகேந்திரன், தேவேந்திரன், ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com