வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
Published on

விவசாயி தற்கொலை

கண்டமனூரை சேர்ந்தவர் சமயணன் (வயது 65). விவசாயி. கடந்த சில ஆண்டுகளாக இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தலை காதல்

தேவாரம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (23). வேன் டிரைவர். இவர் தனது பெற்றோருடன் தேனி கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கம் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சரியாக வேலையில்லாமல் எப்படி திருமணம் செய்வது? என்று புலம்பி வந்தார்.

இந்நிலையில் மனம் வெறுத்து அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com