வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!

சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.
வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!
Published on

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அசோக் குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு 20-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சம்மன் அனுப்பியும் 2-வது முறையாக இன்றும் ஆஜராகவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பு கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com