கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்-அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்-அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னைக்கு வருகிறார். தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com