சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
Published on

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து, 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர், ஓமலூரில் 3 பேர், தாரமங்கலம், வீரபாண்டி, மேச்சேரி, நங்கவள்ளி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com