தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
Published on

சென்னை,

தமிழகத்தில் பருவமழை நிறைவுபெற்ற நிலையில், கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், சில இடங்களில் அனல் காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர். அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com