டிப்பா லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்

டிப்பா லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
டிப்பா லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்
Published on

அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை அரசு அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து, அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட கிரஷர், குவாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பெரம்பலூர் மாவட்ட கிரஷர், குவாரியில் வருகிற 23-ந்தேதி முதல் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பெரம்பலூர் மாவட்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com