வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தேரடி தெரு ஜோதி மார்க்கெட் அருகில் 75 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை தாலுகா சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணைத் தலைவர் விஜயராகவன், இணைச்செயலாளர் உத்தம்சந்த், மூன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் தனக்கோடி உட்பட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com