சுதந்திர தினம்: தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சுதந்திர தினம்: தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
Published on

சென்னை,

நாட்டின் 77-வது ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றுகிறார்.

சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார். சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். சென்னையில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14,15 ஆகிய இரு நாட்கள் முதல்-அமைச்சரின் இல்லம் முதல் தலைமைச் செயலகம் வரை செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, டிரோன், ஏர் பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நெருங்க, நெருங்க பாதுகாப்பு கெடுபிடி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com