விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி உயிரிழந்தது தொடாபான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
Published on

சென்னை,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி இவரது வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் சேலம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் (45), அவருடைய மனைவி கம்சலா (32), அரூர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன், நடராஜன், இவருடைய மனைவி லலிதா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் மாற்றுத்திறனாளி பிரபாகரன், கம்சலா, மதிவாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் பிரபாகரனுக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 12-ந் தேதி நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கியதால்தான் பிரபாகரன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த குமா, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மளிகை கடை உரிமையாளரின் நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டா. இதுகுறித்து நடந்த விசாரணையில், மாற்று திறனாளி பிரபாகரன், அவரது மனைவி ஆகியோ சேந்தமங்கலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டனா.

இந்த நிலையில், மாற்று திறனாளி பிரபாகரன், தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதன் அடிப்படையில், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா. இதன்பின்பு, அவா உயிரிழந்தா. இந்த விவகாரம் தொடாபாக, சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளாகள் இருவா, தலைமை காவலா ஒருவா ஆகியோ உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க, முதல்-அமைச்ச மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா. மேலும், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் அவா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com