கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 81 ஓட்டல்களில் ஆய்வுகெட்டு போன இறைச்சி பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பர்கூரில் உள்ள 81 ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து கெட்டு போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 81 ஓட்டல்களில் ஆய்வுகெட்டு போன இறைச்சி பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பர்கூரில் உள்ள 81 ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து கெட்டு போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உடல் நலம் பாதிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 14 பேர் வீடு திரும்பினர். 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் பர்கூர் பேரூராட்சியில் உள்ள 81 ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கெட்டு போன இறைச்சி, சுகாதாரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

கடும் நடவடிக்கை

ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் இருந்து 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் துரித உணவகங்கள் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் சமையல் செய்து பொது மக்களுக்கு விற்பனை செய்ய உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com