‘நீட்’ தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரம்; நாடு முழுவதும் 13-ந் தேதி நடக்கிறது

ஜே.இ.இ. முதன்மை தேர்வை தொடர்ந்து, வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
‘நீட்’ தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரம்; நாடு முழுவதும் 13-ந் தேதி நடக்கிறது
Published on

சென்னை,

கொரோனா தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, நீட் தேர்வை நடத்துவதா? என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இருப்பினும், தேர்வை நடத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. அதன்படி, ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி முடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை தற்போது தயாராகி வருகிறது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு கணினி மூலம் நடத்தப்பட்டது. ஆனால் நீட் தேர்வு அப்படி இல்லை. அது பேனா மற்றும் பேப்பர் மூலமாக நடத்தப்பட இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com