‘அயலான்’ படத்திற்கு இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘அயலான்’ படத்திற்கு இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் விநியோகத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த படத்தின்

இந்த நிலையில் ஜேக் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அயலான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டியிருப்பதாகவும், அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அயலான் படத்தை வெளியிடுவதற்கு 2022 ஜனவரி 3 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்போடு பேசி பிரச்சினையை முடித்துக் கொள்வதும், மேற்கொண்டு இந்த மனுவிற்கு பதிலளித்து வழக்கை தொடர்வதும் படக்குழுவின் விருப்பம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com