“அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச அரசியல் பதற்றம்” - சு.வெங்கடேசன் எம்.பி.,

25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
“அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச அரசியல் பதற்றம்” - சு.வெங்கடேசன் எம்.பி.,
Published on

சென்னை,

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.

இந்நிலையில் அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச அரசியல் பதற்றம் என்று மதுரை எம்.பி., .வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.. ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும்..

ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு..

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com