திருவண்ணாமலையில் உலக மகளிர் தின விழா

திருவண்ணாமலையில் உலக மகளிர் தின விழா கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலையில் உலக மகளிர் தின விழா
Published on

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி அரசு ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு பெண் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சைக்கிள் போட்டி, தர்பூசணி சாப்பிடுவது, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதே போல் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அரசு பெண் அலுவலர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, தாசில்தார் சரளா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com