திருநெல்வேலி மாநகர காவல் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார் தலைமையில் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் மாநகர காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.