செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு - 31-ந் தேதி நடக்கிறது

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 31-ந் தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு - 31-ந் தேதி நடக்கிறது
Published on

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ராஜசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வருகின்ற மார்ச் 31-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கவுள்ளது.

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்- பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி (+2க்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம். மாத ஊதியம் ரூ.15,435 வழங்கப்படும்.

டிரைவர் பணியிடத்துக்கு, 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலாருக்கும் வாய்ப்பு உண்டு. பேட்ஜ் உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர்., உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.15,235 ஊதியம் வழங்கப்படும். அனைத்து அசல் சான்றிதழ் உடன் முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்.

எதேனும் சந்தேகங்களுக்கு 04428888060, 7397724839 என்ற எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com