மருத்துவ உதவியாளர், டிரைவர்களுக்கான நாளை நேர்முக தேர்வு

108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர்களுக்கான நேர்முக தேர்வு ஜெயங்கொண்டத்தில் நாளை நடக்கிறது.
மருத்துவ உதவியாளர், டிரைவர்களுக்கான நாளை நேர்முக தேர்வு
Published on

108 ஆம்புலன்சில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர்களுக்கான முதற்கட்ட நேர்முக தேர்வு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் மருத்துவ உதவியாளருக்கான, நேர்முக தேர்வுக்கு வருபவர்களின் வயது 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதல் உதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அதேபோல் டிரைவர் பணிக்கு கட்டாயம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முக தேர்வு அன்று 24 வயது முதல் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். டிரைவர் உரிமம் தொடர்பான தகுதிகள் இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறையானது முதல் கட்டமாக எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு நடைபெறும். நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்களது கல்வித்தகுதி, டிரைவர் உரிமம், முகவரி சான்று, அடையாள சான்று ஆகியவைகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வருமாறு மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com