பழுதடைந்த பேருந்துகளால் மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?: நயினார் நாகேந்திரன் கேள்வி


பழுதடைந்த பேருந்துகளால் மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?: நயினார் நாகேந்திரன் கேள்வி
x

திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டயர் வெடித்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

விண்ணைத் தொடும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையைத் திமுக அரசு கண்டுகொள்ளாத வேளையில், கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசுப் பேருந்தில் பயணித்தால், ஓட்டை உடைசல் பேருந்துகள் மூலம் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?

திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொள்ளாது, விண்டேஜ் காரை ஓட்டி போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மக்கள் கப்பலேற்றும் நாள் வெகுதூரமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story