கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி


கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா?  - நயினார் நாகேந்திரன் கேள்வி
x

இது போன்ற செயல்களில் ஈடுபட திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் பலியிடப்பட்ட உயிர்கள்: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் - 22, கள்ளக்குறிச்சி - 65

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது திமுக அரசு? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் காய்ச்சியதாக கோவிந்தராஜ் (எ) கண்ணு குட்டி, கைது செய்யப்பட்டபோது, அவன் திமுக நிர்வாகியே இல்லை என்று கதை கட்டியது திமுக. இன்றோ திமுக கவுன்சிலரும் இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ் குமார் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காகக் கைதாகியுள்ளார். இதற்கு என்ன கதை கூறப் போகிறார்கள்?

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? இது போன்ற செயல்களில் ஈடுபட தான் திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story