மூடநம்பிக்கையை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா ? - அமைச்சர் ரகுபதி பதில்

சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன் கேள்வி எழுப்பினார்.
மூடநம்பிக்கையை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா ? - அமைச்சர் ரகுபதி பதில்
Published on

தமிழக சட்டப்பேரவையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் மூடநம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ரகுபதி, , ஒருவருக்கு நம்பிக்கையாக இருப்பது மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கிறது. அவரவர் உரிமையில் தலையிடுவது சரியாக இருக்காது

நம்முடைய கொள்கைகளை பின்பற்றலாம் அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கையில் தலையிடுவது சரியாக இருக்குமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com