

சென்னை,
தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம்.
அஞ்சல் சேவைகளின் தரம், வாடிக்கையாளர்களின் சேவைகள் ஆகியவற்றை சிறப்பாக மேம்படுத்துவது குறித்த கருத்துகளை அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் என்ற தலைப்புடன் ஏ. சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை DAK ADALAT என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.