மக்கள் உற்சாகமாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருவது நம்பிக்கை அளிக்கிறது - எல்.முருகன்

அவிநாசி பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை எல்.முருகன் இன்று நேரில் பார்வையிட்டார்.
மக்கள் உற்சாகமாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருவது நம்பிக்கை அளிக்கிறது - எல்.முருகன்
Published on

அவிநாசி,

மத்திய இணை மந்திரியும், அவிநாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் இன்று அவிநாசி பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபெற்று கொண்டு இருக்கும் அவிநாசி சட்டமன்றத் தேர்தலையொட்டி அவிநாசி வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டேன்.

அத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறவுகளுடன் கலந்துரையாடி, வாக்குப்பதிவு முன்னேற்றம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டேன்.

மக்கள் தங்கள் உற்சாகமாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருவது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com