மதுரையில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் - அமைச்சர்கள் நேரில் ஆய்வு

ஜல்லிக்கட்டு அரங்கம் அமையவுள்ள பகுதியில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரையில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் - அமைச்சர்கள் நேரில் ஆய்வு
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில், பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கம் அமையவுள்ள பகுதியில் அமைச்சர்கள் எ.வ.வேலும், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கலையரங்கத்திற்கான கட்டுமான பணிகளில் ஈடுபட நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com