ஜெயங்கொண்டம் பஸ்நிலையத்தில் இறந்த முதியவர்

ஜெயங்கொண்டம் பஸ்நிலையத்தில் இறந்த முதியவரின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் பஸ்நிலையத்தில் இறந்த முதியவர்
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு  முதியவர் ஒருவர் அமர்ந்த நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்பது தெரியவந்தது. மேலும், இவர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்ததும், இவரது மனைவி மற்றும் மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் தனது மருமகன் கலியமூர்த்தி பாதுகாப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கலியமூர்த்திக்கு தகவல் கொடுத்து முருகேசனின் உடல் அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் சொந்த ஊரான கீழக்குடியிருப்பு கிராமத்திற்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com