சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்

17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது.
சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

இதைத்தொடர்ந்து அவரை முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தி பேசுவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com