நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை-பணம் திருட்டு

வேடசந்தூர் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை-பணம் திருட்டு
Published on

வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் எஸ்.புதூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர், ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி செல்வி (40). இவர்களது மகன் அருண் (19). நேற்று முன்தினம் பகலில் செல்வி, தனது மகனுடன் திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் இரவு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.43 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com