மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறிப்பு
Published on

நெகமம்

நெகமம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சுந்தரம்மாள்(வயது 70). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் சுந்தரம்மாள் கடந்த 7-ந் தேதி நெகமம் சந்தையில் ஜவுளி வியாபாரம் செய்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள், சுந்தரம்மாளின் அருகில் வந்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி முகவரி கேட்பது போல் அவரிடம் பேசினர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து நெகமம் காவல் நிலையத்தில் சுந்தரம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com