ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ.39,824 ஆக அதிகரிப்பு

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ.39,824 ஆக அதிகரித்துள்ளது
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ.39,824 ஆக அதிகரிப்பு
Published on

சென்னை,

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 39,232ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.39,824-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.74 உயர்ந்து, ரூ.4,978-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 66,900 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோ ரூ.70,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com