

சென்னை,
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 39,232ரூபாயாக இருந்தது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.39,824-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.74 உயர்ந்து, ரூ.4,978-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 66,900 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோ ரூ.70,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.