கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை காரில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை காரில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நில புரோக்கர்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). நில புரோக்கர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அந்த பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வம் நேற்று அதிகாலை வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு காரில் வந்த மர்ம நபர்கள் செல்வத்தின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர்.

வலைவீச்சு

அப்போது சத்தம் கேட்டு எழுந்த செல்வத்தை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து செல்வம் நல்லூர் பேலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நில புரோக்கரை மிரட்டி 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com