நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் 31 மாவட்ட நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வை நடத்த இருக்கிறது. இதற்காக சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது.
நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழக நீதித்துறையில் பணியாற்ற 31 மாவட்ட நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வை நடத்த இருக்கிறது. இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (பி ப்ரவரி) 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்-லைன் மூலம் இதை விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தேர்வு கட்டணத்தை அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் வங்கி மூலம் செலுத்த வேண்டும். மாவட்ட நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வை எழுதலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com