

சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழக நீதித்துறையில் பணியாற்ற 31 மாவட்ட நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வை நடத்த இருக்கிறது. இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (பி ப்ரவரி) 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்-லைன் மூலம் இதை விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான தேர்வு கட்டணத்தை அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் வங்கி மூலம் செலுத்த வேண்டும். மாவட்ட நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வை எழுதலாம்.