ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க - நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்-தொடக்க கல்வித்துறை

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க - நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்-தொடக்க கல்வித்துறை
Published on

சென்னை

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது ;-

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.மாணவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய திறந்தவெளி கிணறுகள், தாழ்வான மின்கம்பிகள் போன்றவை இருந்தால் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.பள்ளி திறக்கப்படும் அன்று பாட புத்தகங்கள், சீருடைகள் கண்டிப்பாக வழங்கவும், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என்பதை உறுதி படுத்தவும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com