கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது; 100 தமிழர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்கிய நிலையில், 100 தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது; 100 தமிழர்களுக்கு அனுமதி
Published on

ராமேசுவரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலிகள் நடைபெறுகின்றன. பின்னர் இரவு 8 மணி அளவில் புனித அந்தோணியார் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

திருவிழாவில் இரண்டாவது நாளான நாளை 11ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி தொடங்குகின்றது. யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் இந்த திருப்பலி 9 மணியுடன் முடிவடைகிறது.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பக்தர்களும், தமிழகத்தில் இருந்து 50 பக்தர்களும் மட்டுமே கலந்து கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் படகுகளில் பக்தர்கள் கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. கச்சத்தீவுக்கு செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளின் உறுதி தன்மை குறித்து மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீன்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை முன்னிட்டு, கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்கியது. இதில், பங்கேற்க 100 தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது. இதனை தொடர்ந்து ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து, 3 விசை படகுகள் மற்றும் ஒரு நாட்டு படகு புறப்பட்டு சென்றுள்ளது. இதில், பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் புறப்பட்டு கச்சத்தீவுக்கு சென்றுள்ளனர். இதற்காக இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com