கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் போலீசார்..!

கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது.
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் போலீசார்..!
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின் கல்லூரியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவிகளும் கலைகளை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் போலீசார் தயார் செய்துள்ளது. 50-க்கு மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி அடையாறு மகளிர் போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை இன்னும் ஒரிரு நாட்களில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com