செமெஸ்டர் தேர்வில் பங்கேற்க கலாஷேத்ரா மாணவர்கள் முடிவு

நாளை நடைபெறும் செமெஸ்டர் தேர்வில் பங்கேற்க கலாஷேத்ரா மாணவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
செமெஸ்டர் தேர்வில் பங்கேற்க கலாஷேத்ரா மாணவர்கள் முடிவு
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கலாஷேத்ரா பாலியார் புகார் தொடர்பாக கல்லூரி மாணவிகள் கூறிய 4 பேராசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை வாய்மொழி மூலமாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேர்வெழுதப் போவதில்லை என்றும் கல்லூரி நிர்வாகத்திடம் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவிகள் தெரிவித்து இருந்தனர். .

இதற்கிடையில் புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் செமெஸ்டர் தேர்வில் பங்கேற்க கலாஷேத்ரா மாணவர்கள் முடிவுசெய்துள்ளனர். ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை எழுத்துப்பூர்வமாக தரும் வரை தேர்வழுத மாட்டோம் என்று மாணவர்கள் கூறிய நிலையில், தற்போது தேர்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com