கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்

வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்
Published on

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அவர் அம்மாவட்டத்தின் வீரசோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கள்ளக்குறிச்சி வருகையையொட்டி விழா நடைபெற்ற பகுதியில் திமுக சார்பில் வாழைத்தார்கள், கரும்புகள், இளநீர் மற்றும் பழங்களை கொண்டு அலங்கார வரவேற்பு தோரணம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்தப்பின் அங்கு கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணத்தில் இருந்து வாழைத்தார்கள், கரும்புகள், இளநீர் மற்றும் பழங்களை பொதுமக்களும், கட்சித்தொண்டர்களும் எடுத்து சென்றனர். போட்டிபோட்டுக்கொண்டு வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com