காமராஜர் பிறந்தநாள் விழா

அரக்கோணம் வட்டார நாடார் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்தநாள் விழா
Published on

அரக்கோணம் வட்டார நாடார் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் இன்பராஜ் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து புத்தகங்களை காணிக்கையாக வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாடார் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மனோகர் பிரபு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com