காமராஜரின் 119-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

காமராஜரின் 119-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
காமராஜரின் 119-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
Published on

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வெள்ளக்கோயில் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com