கன்னியாகுமரி: பதுக்கி வைத்திருந்த வெடிமருந்து வெடித்து சிதறி விபத்து - 2 பேர் காயம்...!

கன்னியாகுமரி அருகே பதுக்கி வைத்த வெடி மருந்து வெடித்து சிதறிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி: பதுக்கி வைத்திருந்த வெடிமருந்து வெடித்து சிதறி விபத்து - 2 பேர் காயம்...!
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தர்ம புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் தமது வீட்டு அருகில் மரப்பட்டரை நடத்தி வருகின்றார். இவரது மாமியார் ராமலட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஒரு பள்ளி மாணவி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார் சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ராமலட்சுமியின் மருமகன் ராஜேந்திரன் அங்கிருந்த பட்டாசுகளை கடத்தி தனது வீட்டுக்கு அருகே குழி தோண்டி புதைத்து வைத்து உள்ளார்.

இப்படி புதைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அப்பகுதிகளில் உள்ள 5 வீடுகளில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ராஜேந்திரனின் உறவினர் ராஜாத்தி அவரது மகள் ஆஷிகா ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.

இந்த குறித்து அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெடி மருந்தை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com