கறம்பக்குடியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கறம்பக்குடியில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
கறம்பக்குடியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாவட்ட முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, ஆய்வு செய்தனர். 15 வார்டுகளிலும் வாகனங்களில் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்கும்படி பொதுமக்களை பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com